ஜெனீவா: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ஆயுத தடையை நீட்டிக்கக் கோரிய அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் குவித்து வைத்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று பல நாடுகள் குற்றச்சாட்டை முன் வைத்தன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ம் ஆண்டு சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே, ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்படுவதாகவும், சில நாடுகள் ஈரானுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக 2018ம் ஆண்டு டிரம்ப் அறிவித்தார்.