ஜம்மு: ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை ஐந்து மாதங்களுக்கு பின்னர் இன்று தொடங்குகிறது. ஜம்முவில் உள்ள பிரபல வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 18ம் தேதி ரத்து செய்யப்பட்டது. 5 மாதங்கள் கடந்த நிலையில், இன்று முதல் இக்கோயிலில் யாத்திரை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகம் நாள்தோறும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.