ஆரல்வாய்மொழி: திருநெல்வேலியில் இருந்து குமரிக்கு கல், ஜல்லி, பாறை பொடி லோடுடன் டாரஸ் லாரிகள் தினமும் அதிகளவில் வருகின்றன. மேலும் இவை பாதுகாப்பற்ற முறையில் அதிக லோடுடன் வருகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகனங்களிலும், சாலையோரமாக நடந்து செல்லும் பொது மக்கள் மீதும் ஜல்லிகள் விழுந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்தன. இந்நிைலயில் நேற்று தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் வரும்போது அவ்வழியாக 5 டாரஸ் லாரிகள் வந்தன.