விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதால் அடிக்கடி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதனையடுத்து நகர பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர். இதனையடுத்து பன்றிகளை வளர்ப்போர் நகர பகுதிகளில் பன்றிகளை விடக்கூடாது வீடுகளிலேயே பட்டி கட்டி வளர்க்க வேண்டும்.