காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 5 மாதங்களாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சிறு கோயில்கள், பக்தர்கள் அதிக அளவில் கூடாத கோயில்களில் சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தலாம் என ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டை, காஞ்சிபுரம் குமரக்கோட்டம், இளையனார் வேலூர் முருகன் கோயில் உள்பட பல கோயில்கள் மூடப்பட்டு இருந்தபோதும், ஆடிக் கிருத்திகையான நேற்று கோயில் வாயிலிலே பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.