பொன்னேரி: பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனாதால் போக்குவரத்திற்கு லாயக்கற்று நிலையில் உள்ளது. இந்நிலையில், 14வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் தெருவில் சிறிய மழைக்கே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. பல மாதங்களாக இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.