சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் , நாகை மக்களவைத் தொகுதி எம்.பி. செல்வராசு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி எம்.பி. ராமலிங்கம் ஆகிய எம்.பி.க்களும் கொரோனா தொற்று பாதிக்கப்படிருந்தது.