திண்டுக்கல்: அகரம்பிரிவில் உள்ள பொதுமயானத்தை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மேற்கு வட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்டது அகரம்பிரிவு. இங்குள்ள குடகனாறு ஆற்றங்கரையில் பொது மயானம் உள்ளது. பேரூராட்சி சார்பில், கடந்த 2010ல் ரூ.3 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மயான வளாகத்தில் இறுதி சடங்கு செய்யும் அமர்வு இடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஆனால் உரிய பராமரிப்பில்லாததால், அமர்வு இடமும், கழிவறையும், சுகாதார வளாகமும் சுகாதாரமின்றி உள்ளது.