கரூரில் செல்போன் ஜார்ஜரில் திடீர் மின்கசிவு...!! தாய், குழந்தைகள் உட்பட 3 பேர் பலி!!!

கரூர்:  கரூர் அருகே செல்போன் ஜார்ஜர் வெடித்து சிதறியதால் தாய், குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் உள்ள ராம் நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த சம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கரூரில் க.பரமத்தி என்ற இடத்தில் பேக்கரி வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் தொழில் மற்றும் வீட்டு கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் முத்துலட்சுமி தனது பெற்றோரை அழைத்து வந்து ராம் நகரில் வசித்து வந்தார். இதனையடுத்து முத்துலட்சுமியின் தந்தை மற்றும் தாயார் அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு முத்துலட்சுமி செல்போனை ஜார்ஜ் போட்டுள்ளார். அப்போது ஜார்ஜரிலிருந்து திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜார்ஜர் வெடித்து சிதறியதால் முத்துலட்சுமி உயிரிழந்தார்.

 பின்னர் அருகில் உறங்கிக்கொண்டிருந்த ரக்சித் மற்றும் தக்சித் ஆகிய இரு குழந்தைகளும் மூச்சு திணறி இறந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர் முத்துலட்சுமியின் வீட்டில் புகை மூட்டம் வெளியேறியதை கண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: