தரங்கம்பாடி: திருக்கடையூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனே மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சி கீழ்மாத்தூர் -கிள்ளியூர் பிரதான சாலையில் கிள்ளியூர் வாய்க்கால் இணைப்பு பாலம் அருகில் விவசாய மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கு செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பிகள் இணைக்கப்பட்ட மின் கம்பம் சூறைக்காற்று காரணமாக வாய்க்காலில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை மற்றும் புயல் வீசினால் மின்கம்பம் வாய்க்காலில் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் என்று பொமக்கள் அச்சமடைகின்றனர்.