ஆர்.எஸ்.மங்கலம்: திருஉத்திரகோசமங்கை, தேவிபட்டினத்தில் இருந்து எடுத்த புனித தீர்த்தம், கல், மண்ணை ராமர் கோயில் கட்டுமான பணியில் சேர்க்க அயோத்திக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்ற 60 வயது முதியவரை பக்தர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கையை சேர்ந்தவர் சூரியநாராயணன் (60). இவர், ராமர் கோயில் கட்டுமான பணிக்காக திருஉத்திரகோசமங்கையில் இருந்து கல், தேவிபட்டினத்தில் புனித தீர்த்தம், மண் எடுத்து கொண்டு சைக்கிளில் நேற்று அயோத்திக்கு புறப்பட்டார். இவரை பக்தர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பி வைத்தனர்.