திருவொற்றியூர்: திருவொற்றியூர் குப்பம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடி வலைகளை மீனவர்கள் சரிசெய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுத்து அறுக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையானவர் பற்றி விசாரித்தனர்.
அதில், அவர் திருவொற்றியூர் கன்னி கோயில் பகுதியை சேர்ந்த ஆனந்த் (45). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், திருமணம் செய்யாமலே, அப்பகுதியில் நீண்ட காலமாக கணவனால் கைவிடப்பட்ட கல்பனா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது நண்பரான இம்ரான் (24) மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு குடும்பம் இல்லாததால், ஆனந்தின் வீட்டில் அடிக்கடி தங்குவது வழக்கம்.