மதுரை: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் அரசு நிர்ணயித்தபடி உள்ளதா? என தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசாணையின் படி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.