சத்தியமங்கலம்: கடம்பூர் வனப்பகுதியில் ஆண் யானை இறந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் வனச்சரகம் குரும்பூர் வனப்பகுதியில் நேற்று வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்து கிடந்ததை கண்டனர். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.