திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷபி. வெளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணத்தால் வேலையின்றி பால்னாங்குப்பத்துக்கு திரும்பி உள்ளார். இவரது மனைவி நசீமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் தவுலத் பாஷா(14), கட்டேரி அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் தந்தைக்கு வருமானம் இல்லாததால் குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்டு வறுமையில் வாடி தவித்தது. குடும்ப கூட்டு முயற்சியால் நொறுக்குத் தீனிகளான, மிக்சர், பக்கோடா உள்ளிட்ட தின்பண்டகளை வீட்டில் தயார் செய்து பொட்டலமாக கட்டி திருப்பத்தூர் பகுதிகளில் மாணவன் விற்பனை செய்து வருகிறார்.