மாவட்டத்தில் மேலும் 332 பேருக்கு தொற்று: பலியானோர் எண்ணிக்கை 258 ஆக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14750 ஆகவும், பலி எண்ணிக்கை 258 ஆகவும் உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 332 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, 332 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14750 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும், 337 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 3,418 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: