புதுடெல்லி: கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவின் மீது பல்வேறு நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற திட்டமிட்டு வருகின்றன. இது இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் உற்பத்தியில் இணைந்துள்ள பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான், சாம்சங் நிறுவனம், லாவா, மைக்ரோமேக்ஸ் உட்பட 22 நிறுவனங்கள் மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி செய்ய விண்ணப்பம் செய்துள்ளன.