பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் எம்எல்ஏ விடுதலை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கடந்த 2006 முதல் முதல் 2011ம் ஆண்டு வரை பெரம்பலூர்  தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார்.  இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த சிறுமியை எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

இது தொடர்பான வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம்  தலா  10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை ேநற்று விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related Stories: