சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 முதல் முதல் 2011ம் ஆண்டு வரை பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில், கேரள மாநிலம் இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த சிறுமியை எம்எல்ஏ ராஜ்குமார் உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.