7 செயற்பொறியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்

சென்னை: பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், விழுப்புரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தரக்கட்டுப்பாட்டு பிரிவு செயற்பொறியாளர் புனிதவேல் தமிழ்நாடு நீர்வளத்துறை மேம்பாட்டு குழுவுக்கும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் செயற்பொறியாளர் ரமேஷ் காஞ்சிபுரம் கீழ் பாலாறு கோட்டம், கடலூர் கோதையாறு  கோட்ட வடிநில செயற்பொறியாளர் சுகுமாறன்  பெரியாறு வைகை கோட்டம், காவிரி தொழில்நுட்ப குழு செயற்பொறியாளர் ஜெயசண்முகம் கடலூர் வெள்ளாறு கோட்டம், திருச்சி நீர்வளப்பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு செயற்பொறியாளர் கீதா திருச்சி சிறப்பு திட்ட கோட்டம், மதுரை பெரியாறு வைகை கோட்ட செயற்பொறியாளர் சுப்ரமணியம் நாகர்கோவில் கோதையாறு கோட்டம் உள்ளிட்ட 7 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,

Related Stories: