சென்னை: ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயரை மாற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ன் கீழ், ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.