செய்யூர்: செய்யூர் தாலுகா சூனாம்பேடு பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவருக்கு, கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதித்தது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்பகுதியில், தொற்று எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சித்தாமூரில் 2 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதையொட்டி, இப்பகுதியில், தொற்று எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும், செய்யூரில் 27, அணைக்கட்டில் 55 என 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.