திருவள்ளுர் நகர திமுக சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொருட்கள்: ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவு பொருட்கள் திமுக சார்பில் நேற்று வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் உணவு வழங்க தேவையான 500 கிலோ அரிசி, 150 கிலோ பருப்பு, நெய் 10 கிலோ, மிளகு 5 கிலோ, சீரகம் 5 கிலோ போன்றவற்றை, நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் அரசு மருத்துவமனையின் டீன் அரசி ஸ்ரீவத்சனிடம் நேற்று வழங்கினர். மேலும், ஞாயிறு தோறும் பிரியாணி வழங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர் நடுக்குத்தகை ரமேஷ். ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொன்.பாண்டியன், எஸ்.மகாலிங்கம், து.தேவன், ராஜேஸ்வரிகைலாசம், ரமேஷ், புட்லூர் குணசேகரன், டி.கே.பாபு, காஞ்சிப்பாடி சரவணன், பவளவண்ணன், மோதிலால், தொமுச பாஸ்கர், கே.நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: