போடி: தேனி மாவட்டம், போடி, சுப்புராஜ் நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (72), கூலித்தொழிலாளி. உடல்நலம் குன்றியதால் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டில் உள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி (60). மூத்த மகள் தமிழ்ச்செல்வி திருமணம் முடிந்து உள்ளூரிலும், இரண்டாவது மகன் அழகுராஜா திருமணமாகி கோவையிலும் உள்ளனர். மூன்றாவது மகன் ரெங்கராஜ் (38) இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, பெற்றோருடன் வசித்து வந்தார்.
நாகலட்சுமி கூலிவேலைக்கு சென்று கணவனையும், மாற்றுத்திறனாளி மகனையும் பராமரித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கூலி வேலை கிடைக்காமல் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்று குடும்பத்தை கவனித்து வந்தார்.