கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களை உலர்த்த உலர்களம் இல்லாத காரணத்தினால் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைகளில் உலா்த்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிடும் சோளம், கடலை, எள் போன்ற பயிர்களை உலா்த்த சாியான உலா்களம் இல்லாத காரணத்தினால் புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் பயன்படுத்துகிறார்கள். மேலும் பட்டுக்கோட்டை சாலையிலும் உலர்த்துகின்றனர்.