சிறையில் உள்ள நளினி, முருகன் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் ஒரு நாள் பேச அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதத்தின் நகலையும் சமர்ப்பித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடிதத்தில் அனுமதிதான் கேட்டுள்ளீர்கள், ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ,மத்திய அரசு சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் கார்த்திகேயன் பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார். இதையடுத்துநளினி முருகனுக்கு வெளிநாட்டு்உறவினர்களுடன் பேச ஒரு நாள் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்நீதிபதிகள் தெரிவித்து, திங்கட்கிழமைக்கு விசாரணை தள்ளிவைத்தனர்.

Related Stories: