சென்னை: இந்து கடவுளான முருகன் மற்றும் கந்த சஷ்டி குறித்து கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் ஆபாச கருத்துக்களுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து பாஜ மற்றும் இந்த மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜன் உட்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குண்டர் சட்டத்தின் கீழ் சுரேந்திர நடராஜனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பரிந்துரை செய்தனர்.