திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையாளர்கள் 3 பேர் போச்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கம்பன் நகரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு முகநூல் மூலம் இலியாஸ் என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வந்தவாசி புறவழிசாலையில் உள்ள சவுக்கு தோப்புக்கு சிறுமியை அந்த இளைஞன் வரவழைத்துள்ளார். அப்போது இலியாசுடன் மேலும் 2 நண்பர்களான பர்கத் மற்றும் சூர்யா ஆகியோரும் அங்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திரா நகர் மற்றும் கீழ்ச்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர்களாவர். பின்னர் 3 வரும் இணைந்து சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 வரும் தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து, அலங்கோலத்துடன் அழுதுகொண்டே அங்கிருந்து வீடு திரும்பிய சிறுமியை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு தோப்புக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், முகநூலில் ஏற்பட்ட பழக்கம் விபரீதத்தில் முடிந்து விட்டதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.