வருசநாடு: மயிலாடும்பாறையில் சேதமடைந்த நிலையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை புதிதாக கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறையில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்குவதற்காக தினசரி கிராம நிர்வாக அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து பேச வரும் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.