செய்யூர்: மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், பிரிந்தனர். பின்னர், கோபால் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து, கோபால் அவரது தங்கை ஊரான செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த வடக்கு வாயலூர் கிராமத்துக்கு அடிக்கடி சென்று வந்தார்.