திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா கும்பலுடன் அமைச்சர்களின் 8 பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சரின் உதவி செயலாளர் ஒருவர் பதவி விலகி இருப்பதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா உட்பட 11 பேர் உடனான தொடர்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் ஐ.டி துறை செயலாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.