புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 1,369 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, 330 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, சுவாசப் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதால் 5 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.