இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்

வருசநாடு: மயிலாடும்பாறையில் இடியும் நிலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் வாடகை கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் மழையால், இந்த கட்டிடம் மேலும் பலவீனமடைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.

இதனால் அங்கு பணி புரியும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் கூறுகையில், ‘‘மின்வாரிய அலுவலகத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டி தர நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: