வருசநாடு: மயிலாடும்பாறையில் இடியும் நிலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் வாடகை கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. தற்போது இப்பகுதியில் பெய்து வரும் மழையால், இந்த கட்டிடம் மேலும் பலவீனமடைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.