குன்னூர்: குன்னூர் பகுதியில் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளது. இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு மலர் நடவு பணி துவங்கியுள்ளது. தோட்டக்கலை உதவி இயக்குநர் பெபிதா துவங்கி வைத்தார். முதற்கட்டமாக பிரன்ச் மேரிகோல்டு, பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.