புதுடெல்லி: டெல்லி மாநில அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை கோவிட்-19 பரவல் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக ஒரு செரோ ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதை சரிபார்க்க தனிநபர்களின் இரத்தத்தில் உள்ள செரெம் குறித்து பரிசோதிக்கப்படும். டெல்லியின் 11 மாவட்டங்களுக்கும், கணக்கெடுப்பு குழுக்கள் அனுப்பப்பட்டு தகவல்கள் பெற்ற பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், அவர்களின் செரா ஐஜிஜி ஆன்டிபாடிகள் மற்றும் தொற்றுநோய் பரவல் ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த கோவிட் கவாச் எலிசாவைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டது.