சென்னை: தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 220 சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் கூடுதல் ஐஜி, டிஐஜி, மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், உதவியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை, டிஎன்பிஎஸ்சி தேர்வும் நடக்கவில்லை. இதனால், பெரும்பாலான அலுவலகங்களில் சார்பதிவாளர்களுக்கு பதிலாக இளநிலை உதவியாளர்கள் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வருகின்றனர்.