குளத்தூர்: குளத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் கிராம ஊரணி நீர்வரத்து கால்வாய் கரை ஓராண்டுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்ட போதும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அவதிப்படும் விவசாயிகள், இது விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், வேப்பலோடை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாசலபுரம் கிராமம். குளத்தூர் அருகே இக்கிராமத்தின் மேற்கு பகுதியில் கீழ ஊரணி உள்ளது. கடந்தாண்டு பெய்த பருவமழையில் பெருக்கெடுத்த தண்ணீரானது குறிப்பாக இவ்வூரணியின் நீர்வரத்து கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்டு அருகேயுள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் வெள்ளமாக சென்று பெரிய அளவில் சேதங்களை உருவாக்கியது.