திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகளால் வாழை மற்றும் செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே படிக்காசு வைத்தான்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிகளவு வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெட்டுக்கிளிகள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இவைகள் வாழை இலைகளையும், வாழைக்காய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. சுமார், 1,200க்கும் மேற்பட்ட வாழை மரங்களில் வெட்டுக்கிளிகள் தங்கி, இலைகள், காய்களை சேதப்படுத்துகின்றன. தகவலறிந்து திருவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வெட்டுக்கிளிகள் இந்த பகுதியை சேர்ந்தவைதான். வேறு எங்கிருந்தும் வரவில்லை. இதற்கு முன் வாழை இலைகள், வாழைக்காய்களை கடிக்காது. இந்த முறை கடித்து சேதப்படுத்தி உள்ளது. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.
திருவில்லிபுத்தூர், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வாழைகள், செடிகள் ‘கத்தரிப்பு’: விவசாயிகள் வேதனை
- பகுதியில்
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- செடிகள்
- காரைக்குடி
- வாழைப்பழங்கள்
- கத்தரிக்காய்
- வெட்டுக்கிளி படையெடுப்பு
- காரைகுடி பகுதி