உத்திரமேரூரில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சதுக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். முகாமில் வட்டார சுகாதார மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, சளி பரிசோதனை, சாதாரண காய்ச்சல் உள்ளவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: