கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு கடும் தண்டனை: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை :  தமிழர்களுடைய கடவுளான முருகனை, இழிவுபடுத்தும் வகையிலே கந்த சஷ்டி  கவசப் பாடலின் பொருளை, பெருமையை, தவறான பொருள்பட திருத்தி வெளியிடப்பட்டுள்ளது கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல்.  இது மிகவும் கண்டிக்கதக்கது. மிகுந்த வேதனைக்குரியது. தவறான நோக்கத்தோடு வெளியிட்ட “கருப்பர் கூட்டத்தினர்” மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மறைந்த தலைவர்களை அவமதிக்கும் வகையிலே செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்,

Related Stories: