ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று புதிதாக 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கடநாடு பகுதியை சேர்ந்தவர் போஜன் (89). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் திருச்சி ஜோசப் கல்லூரியில் போஜன் ஒன்றாக படித்தவர். இதனால், அப்துல்கலாமின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதும், ஊட்டிக்கு வந்தபோதும் இவரை சந்தித்து பேசினார்.