வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்த ஸ்தலம். இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற வேதாரண்யத்தில் ஆடி அமாவாசை, தைஅமாவாசை, மகாளாய அமாவாசை மகோதை புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கடலில் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்த திருமண கோலத்தில் அமைந்துள்ள சிவபெருமானை வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.