பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று விதிமுறைகளை மீறிய தனியார் கல்லூரியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவு நேற்று வெளியானதையடுத்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பல்வேறு பாட பிரிவுகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பம் வாங்க வந்தனர். அந்த கல்லூரி முன்பு காலை முதலே கூட்டம் அதிகமானது. இதனை தொடர்ந்து கொேரானா ஊரடங்கை மீறி சமூக இடைவெளியின்றியும், விதிமீறல் இருப்பதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் வருவாய்துறையினருக்கு புகார் வந்தது.