குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் மட்டும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: