நியூயார்க்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், டெல்ஸ்கா சிஇஓ எலன் மாஸ்க் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய் யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் துணை அதிபரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பிடென் கணக்கையும் ஹேக்கர்கள் பிளாக் செய்துள்ளனர். ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் கணக்கில் இருந்து பிட்காயின் அனுப்பக்கோரி டிவிட் செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் ஊழல் என்று அழைக்கப்படும் இந்த சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்டவர்களின் டிவிட்டர் கணக்குகளில் இருந்து பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சிகளை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆயிரம் அமெரிக்க டாலர்களை குறிப்பிட்ட பிட்காயின் முகவரிக்கு அனுப்பினால் 2000 டாலர் திருப்பி அனுப்பப்படும் என இவர்கள் கணக்கில் டிவிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்த டிவிட்டர் நிர்வாகம் உடனடியாக இதனை தடுத்துள்ளது.