தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனையடுத்து சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ மழை பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: