மதுரை : மதுரையில் 21 நாட்களாக நீடித்த முழு ஊரடங்கு நேற்றிரவுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 3,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.