வாடிப்பட்டி: அலங்காநல்லூர் அருகே விற்பனைக்காக வாகனத்தில் ஏற்றிய பசுவினை பிரிய முடியாத காளை, வாகனத்தை சுற்றி சுற்றி வந்து பாசப்ேபாராட்டம் நடத்தியது அப்பகுதி மக்களை வியப்படைய செய்தது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டை சேர்ந்தவர் முனியாண்டி. விவசாயியான இவர் பசு மாடு வளர்த்து வந்துள்ளார். பசுவுடன் பாலமேடு மஞ்சமலை கோயில் காளையும் ஒன்றாக வளர்ந்து வந்தது, மேலும் பசுவுக்கு வைக்கும் காய்கறி- பழங்கள், அரிசி, தண்ணீரையும் காளை சாப்பிட்டு வந்துள்ளது. ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்தார். அதன்படி சரக்கு வாகனத்தில் பசு மாட்டினை ஏற்றி விற்பனைக்காக வெளியூர் கொண்டு செல்ல முயற்சித்தார்.