சேலம்: கொரோனா ஊரடங்கை மீறி கடை வைத்ததாக, கடந்த ஏப்ரல் 25ம் தேதி, அம்மாப்பேட்டையைச் சேர்ந்த எலுமிச்சம் பழ வியாபாரி வேலுமணி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். உடனடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவரது தாயார் பாலாமணி, மயங்கி விழுந்து உயிரிழந்தார். போலீசார், தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதால், தனது தாய் உயிரிழந்ததாக வேலுமணி குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று வேலுமணி, அவரது சகோதரி உமா மற்றும் உறவினர்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.