சென்னை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு அறிமுகம்!: தமிழக அரசு தகவல்..!! Apr 30, 2021 ட்விட்டர் நடுவண் ஊராட்சி சென்னை @104GoTN தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அரசு தின மலர் சென்னை: கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. @104GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் படுக்கை வசதியை கோரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கோவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தினசரி தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகள் பலர் தங்களுக்கு வெண்டிலேட்டர் துணையுள்ள படுக்கை வசதிகள் வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதிகள் உள்ளது என்பதை கண்டறிய சிரமமாக உள்ளது என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மையமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் படுக்கை வசதிகளுடன் ஆக்சிஜன் கிடைப்பதையும் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் உறுதி செய்யும். ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உருளைகள் என்னென்ன தேவைப்படுகிறது ஆகியவற்றை ஒருங்கிணைக்கக்கூடிய சிறப்பு மையமாக இந்த ஒருங்கிணைந்த மையம் என்பது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … The post கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை பெற ட்விட்டர் கணக்கு அறிமுகம்!: தமிழக அரசு தகவல்..!! appeared first on Dinakaran.
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை