பாரமுல்லா: ஜம்முவின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தின் நோகாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இயக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் அதிரடி
- தீவிரவாதிகள்
- எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு
- காஷ்மீர்
- பயங்கரவாதிகள்
- இந்திய இராணுவ நடவடிக்கை
- பாரமுல்லா